• சகோதரி பற்றிதிருமண வலைத்தளம்
     
  • சுயதொழில் திட்டம்
  • உதவி செய்க

Click for English pages

சகோதரி பற்றி நாங்கள் யார்?

  • சகோதரியை பற்றி
  • சகோதரி குடும்பம்
எங்கள் பிரச்னைகள் எங்கள் பணிகள்
  • ஒதுக்கப்படுதல்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • வீடின்மை
  • ஹெச்.ஐ,வி தொற்று
  • மனநலம்
  • ஹார்போன் சிகிச்சை
  • புகையிலை பழக்கம்
  • பால்மாற்று சிகிச்சை
  • திருமணம், தத்தெடுப்பு
  • பெயர் மாற்றம்
  • முதுமை
  • திருநம்பிகள்
உரிமைக்காகதமிழகம் & கேரளாவில்
  • ஊடகங்களுடன்
  • மாணவர்களுடன்
  • மற்றவர்களுடன்
படங்கள்சகோதரி நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
  • படக்காட்சிகள்
உங்கள் பங்கேற்புேவை புரிய வருக
  • நன்கொடை வழங்குங்கள்
  • பிறருக்கு தெரிவியுங்கள்
  • சேவை வாய்ப்புகள்
  • செய்திமலர் பெறுங்கள்
  • நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்
  • சகோதரியை அழைப்பீர்
ஊடகப்பகுதி ஊடகங்களில் சகோதரி
  • தொலைக்காட்சியில்
  • பத்திரிக்கைகளில்
  • எமது அறிக்கைகள்
  • வலைக்காட்சியில்
கல்கி பக்கங்கள்

கல்கியை அறியுங்கள்

  • கல்கியை பற்றி
  • கல்கியின் பதிவுகள்
  • புகைப்படங்கள்
  • ஊடகங்களில் கல்கி
  • கல்கியை தொடர்புகொள்ள
தொடர்புகொள்கசகோதரியை தொடர்புகொள்ள
  • தொடர்பு வழிகள்

 

 

sahodari

எங்கள் பிரச்னைகள்

வேலைவாய்ப்பின்மை

திருநங்கைகளின் பாலின அடையாளம் பொதுவெளி சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் ஒரு அலுவலகத்திலோ அல்லது நிறுவனத்திலோ வேலை என்பது பெரும்பாலான திருநங்கைகளுக்கு நிறைவேறாத ஒரு அடிப்படை தேவையாகவே உள்ளது.

பெரும்பாலான திருநங்கைகள் இளம்வயதில் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவதால் அல்லது வெளியேறுவதால் கல்வியை தொடரும் வாய்ப்பை இழக்கின்றனர். இதனால் கல்வித்தகுதி குறைவாகவே உள்ளது. அவர்கள் சில இடங்களில் கடைநிலை ஊழியர்களாகவே பணியாற்றுகின்றனர்.

பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் செய்தும், பிச்சை எடுத்தும் தங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். கடைக்காரர்களால் அவமானப்படுத்தப்படுதல், குண்டர்களால் வன்முறைக்கு ஆளாதல், பாலியல் வன்மம் என்று இதில் ஏராளமான துன்பங்களும், ஆபத்துகளும் உண்டு.


திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசின் சமூக நலத்துறை சுயதொழிலுக்காக கடன் மற்றும் மானியம் வழங்க நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சிக்கு சகோதரி உறுதுணையாக இருப்பதுடன் திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சகோதரி ஒரு சிறப்பான சுயதொழில் திட்டத்தை துவக்கியுள்ளது. பட்டர்ப்ளைஸ் என்று அழைக்கப்படும் இச்சுயதொழில் திட்டத்தின் மூலமாக 10 திருநங்கைகள் நாகரிக அணிகலன்கள், பேஷன் நகைகள் செய்ய முழுமையான பயிற்சி எடுத்துள்ளனர்.

சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியால் பயிற்றுவிக்கப்பட்ட திருநங்கைகள் முதல் முறையாக தங்கள் தயாரிப்புகளை Duchess Show என்ற கண்காட்சியிலும் பங்கேற்று விற்பனை செய்தனர். இச்சுயதொழில் திட்டம் வெற்றி பெற்றால் மேலும் பல திருநங்களின் வாழ்வு மலரும். தற்போது சமூக நலத்துறையின் நிதியுதவிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

முதல் பக்கம்

சகோதரி © 2010