எங்கள் பிரச்னைகள்
ஒதுக்கப்படுதலுக்கு எதிரான விழிப்புணர்வு
திருநங்கைகள் நமது சமூகத்தின் அனைத்து நிலைகளிலும், அனைத்து இடங்களிலும் ஒதுக்கப்படுகின்றனர். பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது கழிப்பிடங்கள், ஏன் கோவில்களில்கூட திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது, பாலியல் வன்கொடுமைகள் செய்வது என்பது தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகக்குற்றமாகும்.
பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், சாதிகள் உள்ள நமது நாட்டில் திருநங்கைகள் ஒரு ஒடுக்கப்பட்ட, புலப்படாத, புரிந்துகொள்ளப்படாத சமூகமாக வாழ்கின்றனர்.
திருநங்கைகள் குறித்து சமுகத்தில் நிலவுகின்ற பயம், சந்தேகம், தவறான புரிதல் ஆகிய பிரச்னைகள் கவனத்தில்கொள்ளவேண்டியவை. இப்பிரச்னைகள் குறித்து மாணவர்கள் மத்தியிலும், பொது இடங்களில் கலை நிகழ்வுகள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் நாங்கள்.
சமூக அநீதிகளை எதிர்த்து போராடும் பணியை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.
சகோதரி © 2010